போதை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவை தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இப்போது பெரிய சிக்கல் வந்திருக்கிறது. அதாவது, போதை கடத்தல் வழக்கு தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், 258 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சி உண்மை அம்பலாமாகி உள்ளது என்று கூறி இருந்தார். உண்மையில் அமலாக்கத்துறை சொன்ன ஜான் பிரிட்டோ ஆதவின் உறவினர் அல்ல. இந்த நிலையில் தான், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஸ்டாலினுக்கும், திமுக ஐடி விங்குக்கும் தனது வக்கீல்கள் சூரிய பிரகாசம், மோகன் பார்த்தசாரதி மூலம் ஆதவ் வக்கீல் அனுப்பி உள்ளார். அதில், அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ, எனது உறவினர் அல்ல. இது தொடர்பாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார்.
Veeraputhiran Balasubramoniam7 hour(s) ago
"ஆதவே" இந்த செய்தியில் கூறீவிட்டார் எனது உறவினர் விளக்கம் அளித்து உள்ளார் என்று... எங்க அப்பா க்திருக்குல் இல்லை என்று
canchi ravi19 hour(s) ago
podunga கேஸ்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!
சிவகங்கை • 1 minutes ago