மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தற்போது பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில், சம்பந்தப்பட்ட சொத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் போன்ற முக்கிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்குத் தவறாகப் பதிவு செய்யும் மோசடிகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் நிலம் வாங்கும்போது அந்தச் சொத்தின் உண்மையான நிலவரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, வில்லங்கச் சான்றிதழில் சர்வே எண்ணை கட்டாயமாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்கிறோம் என கூறிய நீதிபதிகள் அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தனர். தமிழகம் முழுவதும் இனி வழங்கப்படும் அனைத்து வில்லங்கச் சான்றிதழ்களிலும் சொத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
முதல்வர் விஜய்க்கு த்ரிஷா HBD வாழ்த்து! #CMVijayBirthday #Trisha #CelebratewithTrisha
பொது • 16 minutes ago