அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அதிமுகவுக்கு கொண்டு வர, அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி காய் நகர்த்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, அதிமுக வட்டாரம் கூறியதாவது: பழனிசாமியிடம் இருந்து பிரிந்து, தவெக அரசுக்கு ஆதரவு அளித்து விட்டு, மீண்டும் பழனிசாமியுடன் வேலுமணி இணைந்து விட்டார். ஆனாலும், வேலு மணிக்கு டில்லி தொடர்புகள் உள்ளதோடு, கவுண்டர் சமுதாய செல்வாக்கும் இருப்பதால், தன்னை வீழ்த்தி விடுவார் என பழனிசாமி அஞ்சுகிறார். எனவே, வேலுமணிக்கு எதிராக, கட்சிக்குள்ளாகவே ஒருவரை வலுவாக உருவாக்க பழனிசாமி முயன்றார். ஆனால், எல்லா வகையிலும் வேலுமணியை எதிர்த்து அரசியல் செய்ய பழனிசாமிக்கு ஆள் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜி சரியாக இருப்பார் என, பழனிசாமிக்கு நெருக்கமான சிலர் கூறி உள்ளனர். தேர்தல் முடிவு வெளியானபோது, ஆட்சியமைக்க தவெக தடுமாறிய நேரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்க பேச்சு நடந்தது. அப்போது, அதற்கான பணிகளை முன்னின்று கவனித்தது செந்தில் பாலாஜி தான். அப்போது, பல ஆண்டுகளுக்கு பின், பழனிசாமியும், செந்தில் பாலாஜியும் நேரடியாக பேசிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 53 minutes ago