சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் விஜயை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. பின், வைகோ அளித்த பேட்டி: த.வெ.க., அரசு அமைந்த பின், கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரோக்கியமான நிர்வாகம் உள்ளது. ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர் என்ற விவாதங்கள் நடக்கின்றன. அந்த கற்பனை, யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. த.வெ.க., கூட்டணியில் ம.தி.மு.க., சேருமா என்ற கேள்விக்கு, இப்போது பதில் கிடைக்காது. ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், முடிவு அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில் தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோவை நியமிக்க, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, மதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுவது உறுதியாகி விட்டது. பொதுக்குழுவுக்கு பின், உதயசூரியன் சின்னத்தில் வென்ற ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருவரும் ராஜினாமா செய்வர். இடைத்தேர்தலில், அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவர். தமிழக கோரிக்கைகளை, மத்திய அரசிடம் சேர்க்கவும், தமிழகத்திற்கான நிதியை பெறவும், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக, வைகோவை நியமிக்க, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 53 minutes ago