குற்றலாம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டூரிஸ்ட்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 13 காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அதிகாலையில் இருந்தே டூரிஸ்ட்கள் அருவியில் குளிக்க குவிந்தனர். கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழை காரணமாக அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வந்த பபீ தால் பீவி என்கிற 51 வயது பெண் அருவியில் தண்ணீர் அதிகம் வரும் பகுதியில் சிக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சுற்றி இருந்தவர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே பபிதால் பீவி இறந்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திமுகவில் ஒழுங்கீனர்கள் யாரும் இல்லையா?

இந்தியா • 9 minutes ago