சிவில் சர்வீஸ் கனவை விதைத்த கலெக்டர் ராதாகிருஷ்ணன் | Chennai | Kumbakonam Fire Tragedy | Survivor Jennifer Becomes Deputy Collector கடந்த 2004 ல் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கோர விபத்தின் பிடியிலிருந்து தப்பி பிழைத்த ஜெனிபர் என்ற சிறுமி தனது விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 15வது ரேங்க் பெற்று துணை கலெக்டராக பதவி ஏற்க உள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெனிபர் 2004 ம் ஆண்டு அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி காலை 10:30 மணி அளவில் பள்ளியின் சத்துணவு சமையல் கூடத்தில் இருந்து பரவிய தீ பள்ளியின் ஒட்டுமொத்த கூரையும் சாம்பலாக்கியது. அன்று 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் விபத்து நடந்த நேரத்தில் தரை தளத்திற்கு தனது தம்பியுடன் வந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவரது தோழிகள் பலர் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஜெனிபரின் மனதில் ஆழமாக பதிந்தது. விபத்துக்கு பின் அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் செய்த உதவிகளும் அவர் காட்டிய ஆறுதலும் ஜெனிபரின் மனதில் சிவில் சர்வீஸ் கனவை விதைத்தது. குடும்ப வறுமை காரணமாக இன்ஸ்டியூட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் ஹோம் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாரானார். ஜெனிபரின் கலெக்டர் கனவுக்கு பெரிதும் அவரது தாய் சுஜாதா துணை நின்றார். 5 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 15 வது ரேங்க் பெற்று ஜெனிபர் சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் எந்த பள்ளியில் இது போன்ற தீ விபத்து நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என ஜெனிபர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
விருதுநகர் • 1 minutes ago
கோயம்புத்தூர் • 1 minutes ago
காஞ்சிபுரம் • 1 minutes ago
சென்னை • 1 minutes ago
புதுச்சேரி • 12 minutes ago
புதுச்சேரி • 12 minutes ago
ராமநாதபுரம் • 12 minutes ago
மதுரை • 12 minutes ago