விற்பனைக்கு வந்த 1.50 டன் மாம்பழம் | 1.5 tons of mangoes ripened with ethylene gas seized | Food Safety Action | Kallidaikurichi | Thirunelveli திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் மாம்பழங்களை ரசாயனம் மற்றும் எத்திலின் வாயு செலுத்தி உடனே பழக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவது தொடர்ந்தது. இவற்றை உண்டால் வயிறு ஒவ்வாமை மற்றும் புற்று நோய் ஏற்படும். எனினும் பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் பழங்களை செயற்கை முறையில் உடனுக்குடன் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் நெல்லை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள், குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு குடோனில் எத்திலின் வாயு மற்றும் பிற ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குடோனில் இருந்த 1,500 கிலோ எடையுள்ள மாம்பழங்களை கைப்பற்றி தரையில் கொட்டி டிராக்டரை ஏற்றி அழித்தனர். மேலும் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். விதிமுறைகளை மீறி ரசாயனங்கள் மூலம் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தமிழகம் • 9 minutes ago
திண்டுக்கல் • 11 minutes ago
கோயம்புத்தூர் • 11 minutes ago
கோயம்புத்தூர் • 11 minutes ago
திருப்பூர் • 19 minutes ago
கோயம்புத்தூர் • 19 minutes ago
காஞ்சிபுரம் • 19 minutes ago
இந்தியா • 19 minutes ago