புதுச்சேரியில் துாய்மைப் பணியாளர்கள் பசி, பட்டினி / Puducherry / BJP MLA sieges Chief Secretarys house தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதைக் கண்டித்தும், சம்பள உயர்வு வழங்கக்கோரியும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் துாய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். breath: தமிழகம் போலவே புதுச்சேரியிலும் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுவைகள் தனியார் நிறுவனம் மறுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரியில் சாராயம், மது விற்பனை மூலம் தினமும் பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எனினும் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் துாய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் தனியார் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. breath: கிடைக்கும் சொற்ப வருமானமும் கிடைக்காததால் குழந்தைகள், குடும்பத்துடன் துாய்மைப் பணியாளர்கள் சம்பளம் எதிர்பார்த்து பசி, பட்டியுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் புதுச்சேரி பாஜ எம்எல்ஏ சாய் சரவணக்குமாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் தலைமை செயலர் சரத் சவுகானை சந்திக்க சென்றார். அனுமதி மறுக்கவே வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் எம்எல்ஏ சாய் சரவணக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. breath: நீண்ட போராட்டத்துக்கு பின் தலைமை செயலரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சரத் சவுகான் உறுதி அளித்தார். அதை ஏற்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும் சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு தரப்பில் உத்திரவாதம் வழங்கவில்லை.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

உலகம் • 09-Jun-2026

உலகம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026

திருவள்ளூர் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026

தகவல் சுரங்கம் • 09-Jun-2026

அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026