புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு தராததால் திடீர் முடிவு PuducherryElections2026 VaiyapuriManikandan புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கட்சி மாறி வருகின்றனர். அந்தவகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இன்று அக்கட்சியில் இருந்து விலகி முதல்வரும் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை சந்தித்து என்ஆர் காங்கிரசில் சேர்ந்தார். நாளை அவர் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக மனு தாக்கல் செய்ய உள்ளார். என்ஆர் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள என்டிஏ கூட்டணியில்தான் அதிமுகவும் உள்ளது. அந்தக் கட்சிக்கு உப்பளம், உருளையன்பேட்டை என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். அதில் வையாபுரி மணிகண்டன் பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகி என்ஆர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். என்டிஏ கூட்டணியில் முத்தியால்பேட்டை தொகுதி என்ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026